தென்னகத்தில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோவில் பங்குனி பொங்கல் சித்திரை தீர்த்த பெருத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.பின்னர் அம்பாள் சுவாமி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
பின்னர் காலை 7.00 மணிக்கு மேல் 8.00 க்குள் சுவாமி சன்னதிக்கு எதிரில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள், கொடிமரம், நந்தி, பலிபீடம், பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனைகள் நடைப்பெற்றது.
இத்திருவிழா இன்று 05.04.2025 தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை 8.00 மணிக்கு இரவு 7:00 மணிக்கு சாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படித்தார்கள் சார்பில் 15.04.2025ம் தேதி வரை விழாக்கள் நடைபெறும்.
1ம் திருவிழாவான 5ம் தேதி பிராமணாள் சமூகம் சார்பில் 7 மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது.
2ம் திருநாளான 6ம் தேதி பூலோக பாண்டி தேவர் மற்றும் ரத்தினவேல் சாமி தேவர் அவர்கள் சார்பில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது.
3ம் திருநாளான 7ம் தேதி இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் சார்பில் பூத வாகனம் காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும். 4ம் திருநாளான 8ம் தேதி மேடைத்தளவாய் சார்பில் சுவாமி அம்பாள் திருவீதி உலா மற்றும் குடவரை வாசல் தரிசனம் நடைபெறும்.
5ம் திருநாளான 9ம் தேதி விஸ்வகர்ம தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.
6ம் திருநாளான 10ம் தேதி அழகர் ஜுவல்லர்ஸ் அழகர்சாமி செட்டியார் சார்பில் சுவாமி யானை மற்றும் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறும்.
7ம் திருநாளான 11ம் தேதி சைவ வேளாளர் சங்கம் சார்பாக நடராஜர் சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளல் நடைப்பெறும்.
8ம் திருநாளான 12ம் தேதி இரவு 7 மணிக்கு சைவ செட்டியார் சங்கம் சார்பில் குதிரை வாகனம் மற்றும் கிளி வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி திருவிதி உலா பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.9ம் திருநாளான 13ம் தேதி கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் காலை 9.00 மணிக்கு நடக்கிறது.
9ம் திருநாளான இரவு 7. மணிக்கு வணிக வைசிய சங்கம் சார்பில் யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.
10ம் நாளான 14ம் தேதி சித்திரை 1ம் தேதிஆயிரம் வைசிய காசுக்காரச்செட்டிப் பிள்ளைகள் சங்கம் சார்பாக காலை 8 மணிக்கு சப்பரம் பல்லக்கில் சுவாமி அம்மனும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார் இத.னை அடுத்து இரவு 6 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனை பூஜையும் யானை வாகனம் அன்ன வாகனத்தில் சுவாமி அம்மன் திருவீதிஉலா வும் இரவு 12 மணிக்கு சுவாமி அம்மனும் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைப்பெற்றும்.
11ம் திருநாளான 15ம் தேதி நாடார் உறவின்முறை சங்கம் சார்பாக கோவில் திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற மன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், கோவில்பட்டி நகர்மன்ற ஆணையர் கமலா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர் திருப்பதிராஜா, சண்முகராஜ், ரவீந்திரன். உட்பட ஏராளமான பக்தர்கள் மற்றும் அனைத்து மண்டக படித்தாரர்களும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் ஆணையர் அன்புமணி,உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) செல்வி,கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி கோவில் ஆய்வாளர் சிவகலைப் பிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
நிருபர்: கோவில்பட்டி எஸ். முத்துக்குமார்