1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயசார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவப்பட்டது. அந்தக் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்ய வேண்டும். அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு. நாட்டுமக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும். உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும். உள்ளார்ந்த உறுதியுடையராய், நமது அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பை ஏற்று, இயக்கி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம் என்ற உறுதிமொழியை மேயர் ஜெகன் பெரியசாமி வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் இணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர் வெங்கடராமன், கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் பட்சிராஜ், முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலருமான ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் பிரபாகர், ஜேஸ்பர் உட்பட அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.